Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 17 முதல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (20:04 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நாக்பூர் உள்பட ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி முதல் பகல் ஒரு மணிவரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்றும் நகராட்சி கமிஷனர் அறிவிப்பு செய்து உள்ளார்
 
இதனை அடுத்து மளிகை பொருட்கள் பழங்கள் காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய பொருள்களின் கடைகள் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் அதற்குள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
நாக்பூர் நகரில் மட்டும் இன்று 2587 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் ஆயிரத்து 95 பேர் குணமாகி உள்ளனர் என்பதும் 18 பேர் பலியாகி உள்ளனர் என்றும் மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments