Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 17 முதல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (20:04 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நாக்பூர் உள்பட ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி முதல் பகல் ஒரு மணிவரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்றும் நகராட்சி கமிஷனர் அறிவிப்பு செய்து உள்ளார்
 
இதனை அடுத்து மளிகை பொருட்கள் பழங்கள் காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய பொருள்களின் கடைகள் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் அதற்குள் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
நாக்பூர் நகரில் மட்டும் இன்று 2587 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் ஆயிரத்து 95 பேர் குணமாகி உள்ளனர் என்பதும் 18 பேர் பலியாகி உள்ளனர் என்றும் மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments