Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் மீது நக்மாவுக்கு வந்த திடீர் அக்கறை ஏன்?

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (06:48 IST)
தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வந்த நிலையில் தற்போது போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென விவசாயிகளுக்கு நடிகையும் தேசிய மகளிர் காங்கிரஸ் பொருளாளருமான நக்மா ஆதரவு கொடுத்துள்ளார்.



 


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தி நடத்துவதில் குஷ்பு மற்றும் நக்மா இடையே கடும்போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்சி நடவடிக்கைகளில் குஷ்பு தீவிரமாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுகிறார்.

அந்த வகையில் தானும் ஏதாவது அதிரடி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ள நக்மா, தற்போது அதற்கு விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுத்து திடீர் அக்கறை காட்டியுள்ளார். நேற்று மதுரைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என்றும் தமிழக அரசியல் நிலவர பின்னணியில் பாஜக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments