Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு விடுதி, எம்.எல்.ஏக்கள் அதிருப்தி. முதல்வர் ராஜினாமா. இங்கல்ல நாகலாந்தில்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (07:19 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. முதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டது, புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய பரபரப்புகள் தற்போது அடங்கிவிட்ட நிலையில் இதேபோல் நாகலாந்து மாநிலத்திலும், முதல்வர் மீது எம்.எல்.ஏக்கள் அதிருதி அடைந்துள்ளதால் அம்மாநில முதல்வர் டி.ஆர்.ஜெலியாங், ராஜினாமா செய்துள்ளார்.




நாகலாந்து முதல்வர் சமீபத்தில் பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவுக்கு அவரது கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்து 49 பேர் தனி அணியாக முன்னாள் முதல்வர் நியூபி ரியோ தலைமையில் ஒருங்கிணைத்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் தனது சொந்த கட்சியின் எம்.எல்.ஏக்களே தனக்கு எதிராக திரும்பியதை அடுத்து நாகலாந்து முதலவர் டி.ஆர்.ஜெலியாங், ஞாயிற்றுக்கிழமை திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த முதல்வர் யார் என்பதில் எம்.எல்.ஏக்களிடையே குதிரைபேரம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments