Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பறந்த மர்ம ட்ரோன்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

Mahendran
திங்கள், 6 ஜனவரி 2025 (14:08 IST)
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் ஒன்று பறந்ததை அடுத்து, கோவில் வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
நேற்று அதிகாலை 4 மணிக்கு பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தை சுற்றி மர்ம ட்ரோன் பறந்ததாகவும், சுமார் 100 அடி உயரத்தில் பறந்த அந்த ட்ரோன் கோயிலை வட்டம் அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மீறி ட்ரோன் பறந்தது. இதற்கு யார் காரணம் என்ற என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாட்டு இந்தியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதில் கலந்து கொள்ள உள்ள நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலை சுற்றி மர்ம ட்ரோன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments