Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்- கமல்ஹாசன்

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (15:48 IST)
மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்  என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி  தன் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டி, இந்தியா முழுவதும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை நடத்தி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்களை தாண்டி வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

அவர் பயணத்திற்கு பல மா நிலங்களைச் சேர்ந்த மக்களும் ஆதரவு தெரிவித்து அவருடன் சேர்ந்து நடந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதுவரை 100 நாட்களைக் கடந்துள்ள இந்த யாத்திரை இன்று  டெல்லியில் நடந்து வருகிறது.

இந்த யாத்திரையில் நடிகரும் ம. நீ, மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தான் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில், இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! என்று பதிவிட்டுள்ளார்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments