Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (06:02 IST)
சமீபத்தில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா நேற்று ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதிலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுமா? என்பது இன்றைய வாக்கெடுப்பில் தெரியவரும்

முத்தலாக் மசோதாவை அப்படியே நிறைவேற்றாமல், மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தியது. ஆனால் லோக்சபாவில் விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்தது

லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றிய பின்னர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளதாகவும், எனவே இந்த மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் லோக்சபாவில் குறிப்பிட்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments