Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைவ் வீடியோவில் யூட்யூபருக்கு முத்தம் கொடுக்க முயற்சி! – மும்பையில் இருவர் கைது!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (15:45 IST)
மும்பையில் தென்கொரிய பெண் ஒருவர் யூட்யூப் லைவ் செய்து கொண்டிருந்தபோது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள கர் பகுதியில் தென் கொரியாவை சேர்ந்த யூட்யூபர் பெண் ஒருவர் தனது பார்வையாளர்களுக்கு அப்பகுதியை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காட்டி பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணின் கையை பிடிப்பதும், முத்தம் கொடுக்க முயல்வதுமாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை பயன்படுத்தி அவரை ஸ்கூட்டரில் ஏறுமாறு அழைத்துள்ளார், அந்த பெண் அதற்கு ‘நோ’ என்று மறுத்து அந்த இடத்தை விட்டு நழுவி சென்றுள்ளார். அப்போதும் கூட தனது நண்பர் ஒருவரையும் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்து அந்த நபர் தொல்லை கொடுத்துள்ளார்.

இது அனைத்தும் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஒளிபரப்பான நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீஸார் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்