Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை எடுத்து கோடீஸ்வரர் ஆன மும்பை நபர்.. சொந்த வீடு, வங்கியில் கோடிக்கணக்கில் பணம்..!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (09:14 IST)
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் பிச்சை எடுத்து சொந்த வீடு மற்றும் வங்கியில் கோடி கணக்கில் பணம் வைத்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பையில் வீதி வீதியாக பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் என்பவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 7.5 கோடி என கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இவருக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வருமானம் வருவதாகவும் அதாவது சராசரியாக தினமும் 2000 முதல் 2500 வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மும்பையில் சொந்தமாக இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வைத்திருப்பதாகவும் அதன் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் இரண்டு சொந்த கடைகள் வைத்துள்ளதாகவும் அதன் வாடகை மட்டும் மாதம் 30 ஆயிரம் வருவதாகவும் தெரிகிறது. பிச்சை எடுத்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆனாலும் இப்போதும் கூட அவர் பிச்சை எடுத்து தான் வருகிறார் என்றும் தனக்கு பிச்சை போட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments