Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிலியர் உடையில் மருத்துவமனைக்கு சென்ற மேயர்! பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:37 IST)
மும்பையில் மருத்துவமனைக்கு செவிலியர் உடை அணிந்து கொண்டு சென்றுள்ளார் மேயர் கிஷோரி பட்னேகர் .

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் முன்னணி படைவீரர்களாக இருந்து கொரோனாவை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையின் மேயர் கிஷோரி பட்னேகர் நேற்று செவிலியர் சீருடை அணிந்து மும்பையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார். கிஷோரி ஒரு முன்னாள் செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தெரிவித்துள்ள கிஷோரி பட்னேகர், தானும் அவர்களில் ஒருவர் என்பதை காட்டவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த கடினமான சூழ்நிலையில் நாம் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கும்தான் அவ்வாறாக சென்றதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments