Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குல்கர்னி மீது தாக்குதல் நடத்தியவர்களை நேரில் பாராட்டிய உத்தவ் தாக்ரே

குல்கர்னி மீது தாக்குதல் நடத்தியவர்களை நேரில் பாராட்டிய உத்தவ் தாக்ரே
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (23:49 IST)
பாஜக மூத்த தலைவர் குல்கர்னி மீது மையை ஊற்றி தாக்குதல் நடத்திய சிவசேனா தொண்டர்களை அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார்.
 

 
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகம்மது கசூரி எழுதிய புத்தக வெளியீட்டு வெளியீட்டு விழாவிற்கு பாஜக மூத்த தலைவர் குல்கர்னி ஏற்பாடு செய்தார்.
 
இதனால் அவர் மீது சிவசேனா கடும் கோபம் கொண்டது. இதனையடுத்து, குல்கர்னி மீது சிவசேனா தொண்டர்கள் மை ஊற்றி தாக்குதல் நடத்தினர். இந்த செயலுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், குர்கர்னி மீது மையை ஊற்றி தாக்குதல் நடத்திய சிவசேனா தொண்டர்களை நேரில் அழைத்த அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, சிவசேனா கட்சி பத்திரிக்கையான சாம்னாவில், குல்கர்னி மீது மை உற்றி தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்தித்த பாராட்டுத் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil