Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (07:30 IST)
அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனத்திற்கு மின் விநியோக ஒப்பந்தம் வழங்கியது நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், மின் வினியோகம் ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். ஆதாரம் இல்லாத பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் இந்த மனுவில் உள்ளன என்றும், இது போன்ற மனுக்களால் சில நல்ல விஷயங்கள் கூட நடத்த முடியாமல் தடுக்கப்படுவதாகவும் கூறினர்.

"முதலமைச்சர் ஊழலில் ஈடுபட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் மனுவில் இல்லை. மேலும், மனுதாரர் டெண்டரிலும் பங்கேற்கவில்லை. மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை. தெளிவற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் மனுவை தள்ளுபடி செய்வதோடு, மனுதாரருக்கு ₹50,000 அபராதம் விதிக்கிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments