Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - மூடப்பட்ட 71 தடுப்பூசி மையங்கள் !

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:24 IST)
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலியில், மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை வரை அரசு சுகாதார மருத்துவனைகளின் கீழ் இயங்கும் 71 தடுப்பூசி மையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments