Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் பாதுகாப்பு முல்லைப்பெரியாறு அணைக்குத் தேவையில்லை: உம்மன் சாண்டி

Webdunia
புதன், 4 மார்ச் 2015 (11:08 IST)
முல்லைப்பெரியாறு அணைக்கு முழுமையான அளவில் பாதுகாப்பை கேரள காவல்துறையினரால் வழங்க முடியும், எனவே அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி டெல்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
 
பின்னர் டெல்லியில் உள்ள கேரளா இல்லத்திற்கு உம்மன் சாண்டி வந்தார்.
 
அங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறினார்.
 
மேலும், முல்லைப்பெரியாறு அணை கேரள எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அந்த அணையை பாதுகாப்பது கேரள அரசாங்கத்தின் கடமை.
 
அந்த அணைக்கு முழுமையான அளவில் பாதுகாப்பை கேரள காவல்துறையினரால் வழங்க முடியும். எனவே அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments