Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்

Siva
வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:14 IST)
முலாயம் சிங் யாதவ் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் ராமர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார் என அவரது மருமகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை எனவும், ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 22ஆம் தேதிக்கு பின் ராமர் கோவிலுக்கு செல்லவிருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்த நிலையில்  மற்றொரு மகனான பிரதிக் என்பவரின் மனைவி அபர்ணா என்பவர் தனது மாமனார் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார் என்று தெரிவித்தார். அபர்ணா தற்போது பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது ராமர் கோயில் குறித்த எதிர்க்கட்சியினர் எண்ணம் தவறாக உள்ளது என்றும் ராமர் கோயில் எந்த கட்சியை சார்ந்ததும் இல்லை என்றும் ஒருவரால் கட்டப்பட்டது இல்லை என்றும் பலரது நம்பிக்கையை உருவானது என்றும் தெரிவித்தார் 
 
கண்டிப்பாக முலாயம் சிங் யாதவ் உயிரோடு இருந்திருந்தால் அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்று இருப்பார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

அடுத்த கட்டுரையில்
Show comments