Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நாடுகளை அச்சுறுத்தும் Mpox வைரஸ்! இந்தியா விமான நிலையங்களில் எச்சரிக்கை ஏற்பாடு!

Prasanth Karthick
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:19 IST)

உலக நாடுகள் முழுவதும் Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதால் இந்திய விமான நிலையங்கள், எல்லைகளில் எச்சரிக்கையோடு கண்காணிக்க மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

 

ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்பட்ட குரங்கம்மை தொற்று காரணமாக இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த குரங்கம்மை தொற்று ஆப்பிரிக்கா தாண்டியும் பல நாடுகளில் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் ஸ்பெயின், பாகிஸ்தான் நாடுகளிலும் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் குரங்கம்மை தொற்று தொடர்பான முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

ALSO READ: விடுதியில் பிரியாணி, சமோசா சாப்பிட்ட 35 குழந்தைகள் பாதிப்பு: 2 மாணவிகள் உயிரிழப்பு
 

விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளை விழிப்புடன் கண்காணிக்க அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவமனை ஆகியவற்றில் குரங்கம்மையால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

இதுவரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும் முன் ஜாக்கிரதையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments