Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாரத் ஜடோ யாத்திரை'யில் எம்பி சந்தோக் சிங் மரணம்!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (16:39 IST)
காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் ஆரம்பித்து, தற்போது பஞ்சாம் மாநிலத்தில் நடந்து வருகிறது.

இந்த யாத்திரையில், ராகுல் காந்தியுடன் அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  இன்றைய  பாதயாத்திரை பில்லெளர்  பகுதியில் வந்த காங்கிரஸ் மக்களவை எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே ஆம்புலஸ் மூலம் சந்தோக் சிங் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக  கூறினர்.

எம்பி சந்தோக் சிங்கின் மறைவு அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான், காங்கிரச் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments