Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.. பதறவைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (18:35 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், ஹரித்துவார் ரயில் மிகவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
 
இதுகுறித்து அந்த ரயில்வே எல்லைக்குட்பட்ட பண்டிகுள் போலீஸ்  ஸ்டேசன் அதிகாரி  ராஜேந்திர குமார், தற்கொலை செய்துகொண்ட பெண் சுப்ரியா குர்ஜியார் (30 ), மற்றும் அவரது இரு குழந்தைகள் மகன் கோலு (6), மகள் அன்கிடா (8) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
ரயில் அடிபட்டு இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments