Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணத்திற்கு மறுத்த சிறுமியை கற்பழிக்க சொன்ன கொடூர தாய்

திருமணத்திற்கு மறுத்த சிறுமியை கற்பழிக்க சொன்ன கொடூர தாய்
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:01 IST)
தன்னுடைய மகனை திருமணம் செய்ய மறுத்ததால், கோபமடைந்த தாய், தனது மகனிடம் அப்பெண்ணை கற்பழிக்க சொன்ன விவகாரம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மும்பையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருபவர் சக்ரியா பானு(16). தனது படிப்பிற்காக அத்தை வீட்டில் தங்கியிருந்தார். சுக்ரியாவின் பெற்றோர் நாக்பூரில் வசித்து வருகின்றனர்.
 
சக்ரியாவை அவரது அத்தை மகன் ரஷீத் அலி(31) திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் சுக்ரியாவிற்கும், அவரது பெற்றோருக்கும் இதில் விருப்பம் இல்லை. இதனைத் தொடர்ந்து சுக்ரியா தனது பெற்றோருடன் வசிக்க நாக்பூருக்கு வந்து விட்டார்.
 
இதனால் கோபமடைந்த அவரது அத்தை, சுக்ரியாவை நல்லவள் போல் பேசி அவரது பொருட்களை எடுத்து செல்ல மும்பை வர சொல்லியிருக்கிறார். அதனை நம்பிய சுக்ரியாவும் மும்பை வந்துள்ளார்.
 
வீட்டிற்கு வந்தவுடன், சுக்ரியாவை கயிற்றால் கட்டிப்போட்டு, தனது மகனிடம் சுக்ரியாவை கற்பழித்து விடு என்று கூறியிருக்கிறார். ரஷீத்தும் இரக்கமே இல்லாமல் சுக்ரியாவை கொடூரமாக கற்பழித்துள்ளார்.
 
இதனையடுத்து, சுகிரியா பானு காவல் துறையிடம் முறையிட்டார். மும்பை காவல் அதிகாரிகள் தாயையும் மகனையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil