பெற்ற குழந்தையை கொல்ல முயலும் தாய் : அதிர்ச்சி வீடியோ
பெற்ற குழந்தையை கொல்ல முயலும் தாய் : வீடியோ
ஒரு தாயே தன்னுடைய குழந்தையை, கொடூரமாக அடிப்பதோடு, கழுத்தை பிடித்து நெறித்து அதைக் கொல்ல முயலும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி எனும் ஊரில் வசிக்கும் ஒரு பெண், தன்னுடைய கணவன் மீது உள்ள ஆத்திரத்தில் தன்னுடைய குழந்தையை கண்டபடி அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
குழந்தையை அடிப்பதோடு, அதன் கழுத்தைப் பிடித்து நெறித்து அவர் கொலை செய்யவும் முயல்கிறார்.
மனைவிக்கு தெரியாமல் படுக்கையறையில் சிசிடிவி கேமரா வைத்த கணவர், ஆதாரத்தோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தையை மட்டுமல்லாமல் தன்னையும் மனைவி அடிப்பதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.