Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாத குழந்தையுடன் தாய் சடலம்: வரதட்சனை கொடுமை என சந்தேகம்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (16:13 IST)
ஹரியானாவில், குரேகான் கிராமத்தில் 23 வய்து பெண்ணும் அவரது 9 மாத குழந்தையும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரதட்சனை கொடுமையால் நடந்த கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரு என்ற பெண்ணை கோவிந்த் என்பவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாக்ஷி என்ற 9 மாத குழந்தை ஒன்று உள்ளது. நீருவை அடிக்கடி கணவர் வீட்டினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
 
இந்நிலையில் நீருவும் அவரது 9 மாத குழந்தை சாக்ஷியும் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, அவரது தந்தை முகேஷுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. நீரு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என அவர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் நீருவை கோவிந்த் மற்றும் அவருடைய பெற்றோர்கள் குந்தன் மற்றும் ஷீலா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments