Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாம்பழத் தோட்டத்தில் 30 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2014 (18:42 IST)
கொல்கத்தாவில் அரை டஜனுக்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மாம்பழத் தோட்டத்தில், பிளாஸ்டிக் பைகளில் கட்டியபடி கிடந்த அரை டஜனுக்கு மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அந்த வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
 
இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "நாங்கள் 30 நாட்டு வெடிக்குண்டுகளை கைப்பற்றியுள்ளோம். அந்த வெடிகளைச் செயலிழக்க செய்துவிட்டோம். மேலும் மாம்பழத் தோட்டத்தின் சொந்தக்காரரை தேடிவருகிறோம்" என்று கூறினார்.
 
ஏற்கனவே கடந்த புதன் அன்று மால்டாவை அடுத்துள்ள ஹடிசபா கிராமத்தில் இதே போன்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களில் அநேக இடங்களில் இருந்து, பல வெடிகுண்டுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments