Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: என்ன செய்ய போகிறது அரசு?

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:04 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டி உள்ளது என்றும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் இதுவரை 20,25,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 41,638 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர் என்றும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 13,77,384 பேர்  குணம் அடைந்துள்ளனர் என்றும்  மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் இந்தியாவில்  6,05,933 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து 20 லட்சம் பேர்களுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட 3வது நாடாக இந்தியா மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய போகிறது? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments