Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல் நிலைய குடியிருப்பில் 100 க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுப்பு

காவல் நிலைய குடியிருப்பில் 100 க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுப்பு
, வெள்ளி, 30 ஜனவரி 2015 (15:09 IST)
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் குவியல் குவியலாக 100 க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள உன்னாவோ காவல் நிலைய ஊழியர்களின் குடியிருப்புக்கு அருகில் உள்ள பூட்டிய அறை ஒன்றில் பிளாஸ்டிக் பைகளில் ஏராளமான மண்டை ஓடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 க்கும் மேற்பட்ட பைகளில் 100க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, பல்வேறு விதமான பதில்கள் வருகின்றன. விசாரணை தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இது குறித்து உத்தரப் பிரதேச காவல்துறையினர் கூறுகையில், “மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட அறை முன்னர் மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்தது’’  என்றும் “பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் தான் தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil