Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கறுப்புப் பணத்தை முட்டாள்கள் தான் பதுக்கி வைப்பார்கள்: மோடி மீது அமைச்சர் தாக்கு

கறுப்புப் பணத்தை முட்டாள்கள் தான் பதுக்கி வைப்பார்கள்: மோடி மீது அமைச்சர் தாக்கு
, வியாழன், 10 நவம்பர் 2016 (19:35 IST)
கறுப்புப் பணத்தை யாரும் நோட்டுக்களாகப் பதுக்கிவைப்பதில்லை. முழு முட்டாள்கள்தான் அப்படிச் செய்வார்கள் கேரளா நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.


 

இது குறித்து கூறியுள்ள தாமஸ் ஐசக், “இரவில் அறிவித்த இந்த முடிவு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நாடுகள் பலவும் கரன்சிகளை மாற்றியுள்ளன. என்ற போதிலும் அந்நாடுகள் அதை திடீரென ஒரே நாளில் செய்யவில்லை.

இந்த அறிவிப்பு இந்தியப் பொருளாதார அமைப்பைச் செயலற்று முடக்கிப்போட்டுள்ளது. எவ்வாறு அரசுக் கருவூலங்கள் செயல்படும் என்பதற்குத் தெளிவில்லை. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கே இந்த முடிவு என்பது சரியல்ல.

கறுப்புப் பணத்தை யாரும் நோட்டுக்களாகப் பதுக்கிவைப்பதில்லை. முழு முட்டாள்கள்தான் அப்படிச் செய்வார்கள். கறுப்புப் பணம் அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதன் மூலமும் மற்றும் பொருட்களின் மூலமாகவும் பதுக்கிவைக்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவு கள்ளநோட்டுக்களைத் தடுப்பதற்கே பயன்படும். இந்த முடிவு பொருளாதார அமைப்பைச் சீர்குலைக்கும். பொருளாதார நிபுணர்களோடு இது குறித்து நான் விவாதித்தபோது மத்திய அரசின் இந்த முடிவு அறிவற்ற செயல் என்ற பதிலே கிடைத்தது” என்று கூறியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ரூபாய் தாள்களில் இந்தி திணிப்பா? - கொதிக்கும் தமிழ் அமைப்பு