Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி விவகாரம்: நரேந்திர மோடி - யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (13:34 IST)
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி வாயிலாக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

 
ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தி நகரில் மேற்கொள்ளவுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்வதற்காக உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலிக் காட்சி வாயிலாக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
 
இந்த மாதத் தொடக்கத்தில் யோகி ஆதித்யநாத் டெல்லியில் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பிப்ரவரி மாதம் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
 
இன்றைய சந்திப்பின் போது நரேந்திர மோதியிடம் சாலைகள், உள்கட்டமைப்பு, ரயில் நிலையம் உள்ளிட்டவற்றின் மேம்பாடு குறித்து யோகி ஆதித்யநாத் விளக்கினார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments