Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக், டுவிட்டரில் இருந்து விலகல்? மோடியின் முடிவுக்கு ராகுல் அறிவுரை

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (06:55 IST)
அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதை அடுத்து அவரை ஃபாலோ செய்து வரும் மில்லியன் கணக்கானோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இது குறித்து தனது பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் ஆலோசனை செய்ததாகவும் இதுகுறித்த தகவலை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
ஃபேஸ்புக், டுவிட்டரில் உலகிலேயே அதிக ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவிட்டிற்கும் மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவியும். அந்த அளவுக்கு அவரது மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் அவரது டுவிட்டுக்களை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமரின் இப்படி ஒரு டுவிட்டை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் பிரதமரின் இந்த முடிவு குறித்து கருத்து கூறிய ராகுல்காந்தி, ‘வெறுப்பை கைவிடுங்கள், சமூக வலைத்தளங்களை அல்ல’ என்று அறிவுரை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments