அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமர் என்று ஜம்முவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களை மேக் இன் இந்தியா திட்டம் ஊக்குவித்து உத்வேகம் அளிக்கும், அதனால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர். எனவே காங்கிரஸ் கவலைப் பட தேவையில்லை என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
ஜம்முவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-
நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும். பொருட்களின் தரத்தை சோதிக்கவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க மேக் இன் இந்தியா திட்டம் கண்டிப்பாக உதவும், என்றார்.