மோடி 5 நாள் பயணம் – வெளிநாடு இல்லை உள்நாட்டில்தான் !

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (14:28 IST)
தேர்தலை முன்னிட்டு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு மோடி 10 மாநிலங்களுக்குப் பயணம் செய்ய இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வின் படுதோல்வியை அடுத்து மீண்டும் தனது பலத்தைக் கட்சிக்குள்ளாகவும் வெளியிலும் நிரூபிக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளார் மோடி. அதையடுத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு 10 மாநிலங்களில் நடைபெறும் பாஜக வின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார். முதலில் நாளை பிப்ரவரி 8 ஆம் தேதி சத்தீஸ்கர், மேற்கு வங்கம்  மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

இரண்டாம் நாளான பிப்ரவரி 9ஆம் தேதி கவுகாத்தி, அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் நடக்கும் விழாக்கள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்ள இருக்கிறார்.

பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூர் ,கர்நாடகாவின் ஹுப்பள்ளி மற்றும் ஆந்திராவின் குண்டூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 11 ஆம் தேதி உத்திர பிரதேசம் மாநிலம் மற்றும் 12 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ராவுக்கும் செல்ல இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் விஜய்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!

SIR திருத்தத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!

பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!

ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள்.. ராகுல் காந்தி கூறிய குற்றச்சாடில் திடீர் ட்விஸ்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments