Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி உடலில் விஷ ஊசி; சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (19:13 IST)
ராகுல் காந்தி மோடியை கட்டியணைத்தற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சையான கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார்.
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். 
 
இந்த சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
 
ராகுல் காந்தி கட்டியணைக்க, பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்களது எதிரிகளை வீழ்த்த முயல்வார்கள். மோடி உடனடியாக மருத்துவமனை சென்று தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என்று பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
 
இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments