Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளரின் உயிரை காப்பாற்றிய மோடி

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (18:40 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள அஜி அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பத்திரிக்கையாளர் ஒருவரின் உயிரை காப்பாற்றினார்.


 

 
குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற அஜி அணை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவர் விழாவில் மோடியையும் குஜராத் மாநில முதலமைச்சர் ருபானியையும் பதிவு செய்வதற்காக நின்றுக் கொண்டிருந்தார்.
 
அப்போது திறந்துவிடப்பட அணையில் இருந்து தண்ணீர் வருவதை கூட கவனிக்காமல் அவர் விழாவை பதிவு செய்வதில் கவனம் செலுத்தி இருந்தார். தண்ணீர் ஓடி வரும் இடத்தில் ஒளிப்பதிவாளர் கேமராவுடன் நிற்பதைக் கண்ட பிரதமர் மோடி, அவருக்கு செய்கை மூலம் தண்ணீர் வருவதை தெரிவித்தார்.
 
பிரதமரின் செய்கையை புரிந்துக் கொண்ட அந்த ஒளிப்பதிவாளர் கேமராவை விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓடினார். பின்னர் சிறிது நேரம் கழித்து கேமரா மீட்கப்பட்டது. அவர் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments