Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் அமைந்தது ரயில்வே பட்ஜெட் - மோடி

வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் அமைந்தது ரயில்வே பட்ஜெட் - மோடி
, புதன், 9 ஜூலை 2014 (08:49 IST)
நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் ரயில்வே பட்ஜெட் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர், டுவிட்டர் பதிவில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:
 
"சாமானிய மக்களை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட்டை தயாரித்துள்ள அமைச்சர் சதானந்த கெளடாவுக்கு பாராட்டுகள். ரயில்களின் வேகம் அதிகரிப்பு, சிறப்பான சேவை, உயர் பாதுகாப்பு போன்ற அம்சங்களை இந்த பட்ஜெட் உள்ளடக்கியுள்ளது.
 
நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான இன்ஜினாக ரயில்வே துறை உருவெடுத்துள்ளது. உறுதியான, வெளிப்படையான, நேர்மையான ரயில்வே நிர்வாகத்தின் மூலம் நாட்டை முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கம் என்பதை ரயில்வே பட்ஜெட் மூலம் சதானந்த கெளடா கோடிட்டுக்காட்டியுள்ளார்' என்று மோடி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil