Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வாக்குறுதியளித்த மோடி: சுரேஷ் தாஸ்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (17:57 IST)
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கான முயற்சிகளை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தங்களுக்கு வாக்களித்ததாக அகில பாரத திகம்பர என்ற இந்து அமைப்பின் தலைவர் சுரேஷ் தாஸ் தெரிவித்துள்ளார்.

அகில பாரத திகம்பர என்ற இந்து அமைப்பின் தலைவர் சுரேஷ் தாஸ், அளித்த பேட்டி ஒன்றில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட விவாதங்களில், அவர் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகளை செய்வதாக வாக்களித்துள்ளார்.

மேலும் ஒருவேளை, பிரதமர் 2 ஆண்டுகளுக்குள் ராமர் கோவிலை கட்டும் முயற்சிகளை செய்யாவிட்டால், நாங்கள் எங்கள் போராட்டம் மூலமாக அதை செய்து முடிப்போம் என எச்சரிக்கை விடுத்த அவர் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு ஆதரவாக உள்ளது என்றும் கூறினார்.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments