Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது - மோடி

ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது - மோடி
, வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (20:03 IST)
ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை சரியாக நடைபெறவில்லை.
 
லலித்மோடி, வியாபம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடக்கி வருகின்றன. காங்கிரஸ் எம்.பி.க்களின் அமளி காரணமாக எந்த மசோதாக்களும் நிறைவேற்றப்படவில்லை.
 
நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி “பாஜக நாட்டை காக்க முயலும் போது காங்கிரஸ் குடும்பத்தை காக்க முயல்கிறது. ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அவரசரநிலை காலத்தை நினைவுப்படுத்துவது போல் இருக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் தொகுதிகளுக்கு சென்று காங்கிரசை அம்பலப்படுத்துங்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil