Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டு அரசியல் வாழ்வில் மோடியை போல் ஒரு சரியான தலைவரை பார்த்ததில்லை: சந்திரபாபு நாயுடு

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (14:33 IST)
எனது 40 ஆண்டு அரசியல் அனுபவத்தில் மோடியை போல் இந்தியாவில் ஒரு சரியான தலைவரை பார்த்ததில்லை என்று ஆந்திர முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்றும் நாடு குறிப்பிட்ட தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 
 
நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், பல அரசியல் தலைவரை பார்த்திருக்கிறேன், அவர்களில் உலக அளவில் இந்தியாவை சிறந்த நாடாக நிலை நிறுத்திய பெருமை பிரதமர் மோடியை மட்டுமே சேரும் என்று அவர் தெரிவித்தார். 
 
இந்தியாவுக்கு சரியான நேரத்தில் சரியான தலைவர் கிடைத்திருக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments