அனுமதி கிடைத்தும், பாக். வான்வெளி பயணத்தை புறக்கணித்தார் மோடி!

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (12:14 IST)
கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் மாநாடு இன்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியை புறக்கணித்து பறந்து சென்றார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம், கிர்கிஸ்தான் ஷாங்காய் மாநாட்டிற்கு பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்வதற்காக, பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு அனுமதி கோரியது.

பாகிஸ்தான் அரசு அந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட நிலையில், இன்று ஷாங்காய் மாநாட்டிற்கு பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியே தனது விமானத்தில் பறக்க புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமர் மோடியின் விமானம் ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக கிர்கிஸ்தான் நாட்டைச் சென்றடையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments