Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி கிடைத்தும், பாக். வான்வெளி பயணத்தை புறக்கணித்தார் மோடி!

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (12:14 IST)
கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் மாநாடு இன்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியை புறக்கணித்து பறந்து சென்றார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம், கிர்கிஸ்தான் ஷாங்காய் மாநாட்டிற்கு பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்வதற்காக, பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு அனுமதி கோரியது.

பாகிஸ்தான் அரசு அந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட நிலையில், இன்று ஷாங்காய் மாநாட்டிற்கு பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியே தனது விமானத்தில் பறக்க புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமர் மோடியின் விமானம் ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக கிர்கிஸ்தான் நாட்டைச் சென்றடையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments