Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ போட்டதாக டகால்டி விட்டாரா மோடி? காட்டிக்கொடுத்த க்ளோஸ் ஃப்ரெண்ட்!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (16:11 IST)
இந்திய பிரதமர் குறித்து அவரது 43 ஆண்டுகால நண்பரான விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகடியா பேடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
அந்தர் ராஷ்ட்ரீய இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகடியா. இவர் மோடி குறித்தும் அவரது அரசியல் செயல்முறைகள் குறித்தும் கடுமையான விமரசங்களை முன்வைத்துள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு 125 கோடி இந்தியர்களை இருட்டில் வைத்திருந்தது. ஆனால் தற்போது நாட்டின் இந்துக்கள் விழித்து கொண்டனர். முத்தலாக்கை கொண்டு வந்ததன் மூலம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டார் மோடி.
மோடியை 2வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்வு செய்தாலும் அவர் ராமர் கோயிலை கட்டி முடிக்கமாட்டார். ராமர் கோவிலை கட்டி முடித்துவிட்டால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நாட்டில் வேலை இல்லாமல் போய்விடும். 
 
அதேபோல், மோடியுடன் நான் 43 ஆண்டுகள் நட்புடன் இருந்தேன். இதில் ஒரு முறைகூட அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை. எல்லாம் மக்களின் அனுதாபத்தை பெறவே மோடி டீ விற்றதாக கூறியுள்ளார் என ஏழைத்தாயின் மகனின் முகத்திரையை கிழித்து விட்டார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments