இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா பெயரில் விண்ணப்பம்: அதிர்ச்சி தகவல்..!

Mahendran
செவ்வாய், 28 மே 2024 (11:16 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களின் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சச்சின், தோனி உள்ளிட்டோர் பெயர்களில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் ஏராளமான போலி விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
 
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி என தகவல்கள் வெளியானதை அடுத்து பிசிசிஐ அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க!.. தவெக இனிமே வேறலெவல்!.. செங்கோட்டையன் மாஸ்!...

காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments