Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் மிகப்பெரிய ஊழலில் அம்பானியுடன் மோடியும் கூட்டாளி; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (17:40 IST)
தொழிலதிபர் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 
கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.526 கோடிக்கு வாங்கப்பட்ட போர் விமானம் தற்போது 1,600 கோடிக்கு வாங்கப்படுகிறது. இந்த துறையில் சிறிதும் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தில் பங்கு அளிக்கப்பட்டதில் இருந்து மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிகிறது.
 
மோடி இந்திய மக்களுக்கு பிரதமராக பணியாற்றாமல் தொழிலதிபர்களுக்கு பிரதமராக பணியாற்றுகிறார். அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக உள்ளார். இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய ஊழலில் மோடியும் கூட்டாளி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments