Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துறவிபோல் நடித்து 90 சதவீத மக்களை ஏழைகளாக்கிவிட்டார்: மாயாவதி

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (15:21 IST)
ரூபாய் நோட்டு விவகாரத்தில் துறவிபோல் நடித்து 90 சதவீத மக்களை ஏழைகளாக்கிவிட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 


 


 
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் முரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன்தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது, அடிமட்டத்தில் இருந்து ஊழலை ஒழிக்கும் கடுமையான போராக இருக்கும் என்று கூறினார்.
 
பிரதமர் கருத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உடனடியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
பிரதமர் நரேந்திர மோடி பலவீனமானவராக உள்ளார். தனது பலவீனத்தை மக்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை அவர் திடீரென அறிவித்து மக்களின் கவனத்தை வேறு பக்கமாக திசை திருப்பி உள்ளார்.
 
தனக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments