''மொபைல் கட்டணம் உயரவுள்ளது - Vodafone-Idea தலைவர் தகவல்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:57 IST)
சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம்  நடந்தது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் – ஐடியா நெட்வோர்க், அதானி டேட்டா நெட்வோர்க் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த 5 ஜி ஏலத்தில், ரூ.1.40 லட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மொபைல் போன் சேவை கட்டண உயர்வு குறித்து , வோடபோன் ஐடியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அதிகாரி ரவீந்தர் தக்கூர் கூறியுள்ளதாவது:

அனைத்துவித போன் சேவை கட்டணங்களும் இந்த ஆண்டின் இறுதியில் அதிகரிக்கும். 5ஜி ஸ்பெக்ரம் ஏலத்திற்கு என சில தொகைகள் செலவிடப்பட்டுள்ள நிலையில், 5 ஜி கட்டணம் என்பது 4 ஜி கட்டண சேவையைவிட அதிகரிக்கும்.

இன்ட 5ஜி சேவையில், கூடுதல் டேட்டா இருக்கும், இதனால், நுகர்வும் அதிகரிக்கும். வாடிக்கைளரின் வரவேற்பை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவமம் ரூ.18,500 மதிப்பில் ஸ்பெக்ட்ரம் அலைவரியை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments