Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படை தளபதிகள் குழுவிற்கு தற்காலிக தலைவர் நியமனம்! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (09:26 IST)
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்த நிலையில் முப்படை தளபதிகள் குழுவிற்கு தற்காலிக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களது உடல்கள் ராணுவ மரியாதையோடு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்திய முப்படைகளில் அடுத்த தலைமை தளபதி யார் என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய முப்படைகளின் தளபதி குழுவிற்கு தலைவராக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு நபர் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments