Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான இந்திய விமானம்; விபத்துக்குள்ளானதாக அதிகார பூர்வ அறிவிப்பு!!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (12:56 IST)
காணாமல் போனதாய் தேடப்பட்டு வந்த சுகோய் 30 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


 
 
பிரான்ஸின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக 1997 ஆம் ஆண்டு சுகோய் ரக விமானங்கள் சேர்க்கப்பட்டது. ஆனால், இது  தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.
 
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி அஸ்ஸாம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்டது சுகோய் ரக விமானம். 
 
புறப்பட்ட அரை மணிநேரத்தில் ரேடாரின் இணைப்பை விமானம் இழந்தது. எனவே, மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. 
 
தேடப்பட்டு வந்த நிலையில் விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநில மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
 
இதையடுத்து அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments