மும்பையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான தாஜ் ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றாக மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில், மின்கசிவு காரணமாக ஓட்டலின் தரைத்தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கரும்புகை பீறீட்டு எழுந்தது.
இது குறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை லாவகமாக அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக, ஹோட்டலில் இருந்த பலரும் பெரும் அச்சம் அடைந்தனர். பாதுகாப்பு கருதி பலர் வெளியேற்றப்பட்டனர். பின்பு, அவர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர்.
இந்த தீ விபத்து குறித்து, தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தாஜ் ஹோட்டலில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துவிட்டோம். இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றார்.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!