Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 வயது சிறுவனை சிறுநீர் குடிக்க வைத்த கிராம மக்கள்: கோதுமை திருடியதால் தண்டனை

11 வயது சிறுவனை சிறுநீர் குடிக்க வைத்த கிராம மக்கள்: கோதுமை திருடியதால் தண்டனை
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (18:41 IST)
உத்தர பிரதேசத்தில் ஒரு வீட்டில் 30 கிலோ கோதுமை திருடியதாக கூறி 11 வயதான சிறுவன் ஒருவனை கிராம மக்கள் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
உத்தர பிரேதேசம், பரேலி மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறான் சுனில் என்ற 11 வயது சிறுவன். இந்த சிறுவன் அருகில் உள்ள ஒரு வீட்டில் 30 கிலோ கோதுமை திருடியதாக கூறி கிராம பஞ்சாயத்தின் முன் கொண்டு செல்லப்பட்டான்.
 
கிராம பஞ்சாயத்தில் சிறுவனை அடித்து உதைத்துள்ளனர். மேலும் ஒரு குவளையில் சிறுநீரை கொடுத்து சிறுவனை குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை ஊரில் உள்ள அனைவரும் வேடிக்கை பார்த்தவாறே நின்றுள்ளனர்.
 
சிறுவனின் சகோதரி இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் இரண்டு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை ஆனார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil