Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் விஜயபாஸ்கர் கொசுக்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்ய வேண்டும்; சேலத்தில் போராடிய பெண்கள்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (15:42 IST)
டெங்கு காய்ச்சலினால் மரணங்கள் அதிகரித்து வருவதால் கொசுக்களுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்யப்படும் என்று சேலத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் கூறியுள்ளார்.


 

 
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகமாகி வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலத்தின் முன்பு, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் சார்பாக சுகாதார சீர்கேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்கள்.
 
அதில், டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் குழுவோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து டெங்கு கொசுக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் கொசுக்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்து சீர்வரிசையை சுகாதாரத்துறை அமைச்சருக்கும், சுகாதார செயலாளருக்கும் அனுப்புவோம் என்றனர்.
 
இவர்களின் இந்த போராட்டம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொசுக்களை ஒழிக்க அவர்கள் விடுத்த கோரிக்கை பெரும் வினோதமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments