Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவை பார்வையிட சென்ற போது விபத்து.. சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு என்ன ஆச்சு?

Siva
புதன், 31 ஜூலை 2024 (09:00 IST)
கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் வயநாடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய மருத்துவர்கள் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments