Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிகையாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி பரபரப்பு புகார்.!!

Senthil Velan
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (13:42 IST)
பத்திரிகையாளர்கள் தனக்கு தொந்தரவளித்ததாக கூறி மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர்களுக்கு எதிராக திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
 
கேரள திரைத்துறை மீதான பாலியல் புகார் புயலை கிளப்பி உள்ளது. பல முன்னணி நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் அனைத்து திரையுலகையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர், நடிகைகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக, நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆவேசமாக பதிலளித்த அவர், பத்திரிகையாளர்களை பிடித்து தள்ளிவிட்டு, கை விரலை உயர்த்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் அக்கரே திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


ALSO READ: பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு.! விரிவான விசாரணை தேவை.! டிடிவி தினகரன் வலியுறுத்தல்.!!
 
இந்நிலையில், பத்திரிகையாளர்கள் தனக்கு தொந்தரவளித்ததாக கூறி சுரேஷ் கோபியும் திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்