Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாக்கடையில் கைவிட்டு சுத்தம் செய்த அமைச்சர்! வாய்பிளந்த பொதுமக்கள்!

சாக்கடையில் கைவிட்டு சுத்தம் செய்த அமைச்சர்! வாய்பிளந்த பொதுமக்கள்!
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (12:35 IST)
புதுச்சேரில் வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் கமலக் கண்ணன்.


 


இவர் காரைக்கால் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த போது, அவரை சூழ்ந்த மக்கள், தங்கள் பகுதியில் சாக்காடை கால்வாய் அடைத்து பல நாட்களாக கழிவு நீசெல்ல வழியின்றி தவித்து வருவதாகவும், பல முறை இது தொடர்பாக புகார் கொடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதை கேட்ட அமைச்சர் சிறிதும் யோசிக்காமல் சாக்கடை கால்வாய் அருகே சென்று, மண்டியிட்டு சாக்காடையில் ஏற்பட்ட அடைப்பை கையால் எடுத்தார். இதை பார்த்து பொதுமக்களும் அதிகாரிகளும் வியப்படைந்தனர்.

பின்னர், அவர் துப்புரவு பணியாளர்கள் வரவழைத்து, கால்வாயை மேலும் சீர்படுத்த செய்தார். அமைச்சரின் செயலுக்கு இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசியமங்களம் சிவாயம் பிடாரியம்மன் கோவில் திருவிழா : புகைப்படங்கள்