Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டத்தை அடக்குறதுதான் நல்லது! – மத்திய அமைச்சர் கருத்து!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (13:39 IST)
ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.

கடந்த சில காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் மக்கள் பலர் பணத்தை இழப்பதும், அதனால் கடன் தொல்லைக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர் கதையாகி உள்ளது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியானதாக இருக்கும். இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டியபிறகு ஆன்லைன் சூதாட்டத்தை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்” என அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments