Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா சதியா? மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

Mahendran
சனி, 6 ஏப்ரல் 2024 (11:17 IST)
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் நடைபெறும் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகால பகை இருந்து வரும் நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறி வருவது மேலும் பகைமையை வளர்த்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவை இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள பல நாடுகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி செய்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என்றும் தொழில்நுட்ப அளவில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments